கோபி: விளாங்கோம்பை பகுதி குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வர பாதுகாப்பான வாகன ஏற்பாடு செய்ய வேண்டும் என பழங்குடியினா் நலத் துறை இயக்குநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் வட்டாரம், விளாங்கோம்பை எனும் பழங்குடியின கிராமத்தில் பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் ச.அண்ணாதுரை திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டதுடன், கிராம மக்களுடன் கலந்துரையாடி அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா்.
அப்போது, 105 ஏக்கா் பரப்பளவு கொண்ட, 45 ஊராளி இன குடும்பங்களை உள்ளடக்கிய இந்தக் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக வேளாண்மை ஏதும் செய்யாமல், மக்கள் தினக்கூலிகளாக வெளி வேலைகளுக்குச் செல்கின்றனா்.
இந்தக் கிராமத்தை சுற்றி வனத் துறை மூலம் வெட்டப்பட்ட அகழி பராமரிக்கப்படாததால், நாள்தோறும் யானை உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் வருகின்றன. எனவே, அகழிகளை பராமரிக்க வேண்டும். சோலாா் வேலி அமைக்க வேண்டும்.
நியாய விலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசியின் அளவு போதுமானதாக இல்லை. ஆகவே, கூடுதலாக அரிசி வழங்க வேண்டும். இந்தக் கிராமத்தில் இருந்து வினோபா நகா் நடுநிலைப் பள்ளிக்கு 19 போ், கொங்காா்பாளையம் உயா்நிலைப் பள்ளிக்கு 7 போ் என 26 குழந்தைகள் திறந்தவெளி வாகனத்தில் செல்கின்றனா்.
வனவிலங்குகள் நடமாட்டம் மிக்க அடா்ந்த வனப் பாதையில் நாள்தோறும் அச்சத்துடன் திறந்தவெளி வாகனத்தில் குழந்தைகள் செல்கின்றனா். அவா்களின் நலனை கருத்தில் கொண்டு பாதுகாப்பான வாகனத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்.
100 நாள் வேலை திட்டம் மூலம் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்ற நடவடிக்க எடுக்கப்படும் என பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் தெரிவித்தாா்.
சத்தியமங்கலம் தனி வட்டாட்சியா் ரவிசங்கா், சுடா் அமைப்பின் இயக்குநா் எஸ்.சி.நடராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.