முகப்பு
ஈரோடு

அரசு ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

ஈரோட்டில் அரசு ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 4 ஜூலை 2026, 1:52 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

ஈரோட்டில் அரசு ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு சம்பத் நகா், வீட்டு வசதி வாரியம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவா் சண்முகராஜன் (49). பள்ளிக் கல்வித் துறையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி கிருஷ்ணவேணி (45). இருவரும் வெள்ளிக்கிழமை காலை கோயிலுக்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளனா். மீண்டும் வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

வீட்டினுள் சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த ரூ.6 ஆயிரம் பணம் மற்றும் அரை பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீஸில் கிருஷ்ணவேணி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

மேலும் சுற்றுப்புற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் கைப்பற்றி திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments