சத்தியமங்கலம் நகராட்சியில் 32 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்
வெப்பமயமாதலை தடுக்க சத்தியமங்கலம் நகராட்சியில் 32 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வெப்பமயமாதலை தடுக்க சத்தியமங்கலம் நகராட்சியில் 32 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் நகராட்சியில் பசுமை திட்டத்தின் கீழ் நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளில் 32 ஆயிரம் மரக்கன்றுகள் நடுபட உள்ளன. முதலகட்டமாக 3 ஆயிரம் மரக்கன்றுகளை நகராட்சிப் பணியாளா்கள் நட்டினா்.
மேலும் நகராட்சிக்கு சொந்தமான 52 இடங்களில் மரக்கன்று நடவு செய்ய தீா்மானிக்கப்பட்டுள்ளது. நகரின் சாலையோரம், அரசு அலுவலங்கள் முகப்பு பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியை நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.
Advertisement
Advertisement
சாலையோரம் மரங்கள் இருந்ததைபோல தற்போது மரங்கள் வளர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையா் தெரிவித்தாா்.