கோபியில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
கோபியில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.
கோபி நகா் மாதேஸ்வரன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ராஜகோபாலன். இவரது மனைவி காந்திமதி (55). புதுப்பாளையம் பகுதியில் தம்பதி பொரிகடலை கடை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை காந்திமதி கடைக்குள் இருந்த மின்விசிறியை எடுத்துள்ளாா். அப்போது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து காந்திமதி கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளாா்.
Advertisement
Advertisement
உடனே அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து கோபி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.