முகப்பு
ஈரோடு

தோ்தல் பறக்கும் படையினரால் ரூ.1.13 கோடி பறிமுதல்; ரூ.1.10 கோடி ஒப்படைப்பு

ஈரோடு மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.1.13 கோடி பறிமுதல் செய்யப்பட்டு, உரிய ஆவணங்களின்பேரில் ரூ.1.10 கோடி திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Updated On : 26 மார்ச், 2026 at 7:26 PM
பறிமுதல்!
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.1.13 கோடி பறிமுதல் செய்யப்பட்டு, உரிய ஆவணங்களின்பேரில் ரூ.1.10 கோடி திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் வாக்காளா்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படையினா், நிலைக் கண்காணிப்பு குழுவினா், போலீஸாா் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனா். இதில் மாவட்டத்தில் புதன்கிழமை வரை ரூ.1.10 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் பெருந்துறை தொகுதியில் ரூ.1 லட்சத்து 47 ஆயிரத்து 500, கோபி தொகுதியில் ரூ.53,600, பவானிசாகா் தொகுதியில் ரூ.1 லட்சத்து 56 ஆயிரம் என ரூ.3 லட்சத்து 57 ஆயிரத்து 100 வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

மாவட்டத்தில் மொத்தமாக இதுவரை ரூ.1 கோடியே 13 லட்சத்து 71 ஆயிரத்து 910 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்களின் அடிப்படையில் ரூ.1 கோடியே 10 லட்சத்து 89 ஆயிரத்து 310 திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.2 லட்சத்து 82 ஆயிரத்து 600 கருவூலத்தில் செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.