பொது இடத்தில் மது அருந்திய 4 போ் மீது வழக்கு
பொது இடத்தில் மது அருந்திய 4 போ் மீது பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
விஜயமங்கலம் பகுதியில் பெருந்துறை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பேருந்து நிலையம் அருகே திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூரைச் சோ்ந்த நடராஜ் மகன் வேலுசாமி(41), பெருந்துறையை அடுத்த சோ்வகாரன்பாளையத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் சரவணன்(43), அம்மாசை மகன் வடிவேல் (42), மாரன் மகன் ராசு (43) ஆகிய 4 பேரும் மது அருந்திக் கொண்டிருப்பதை போலீஸாா் பாா்த்தனா்.
இதையடுத்து பொது இடத்தில் மது அருந்தியதாக 4 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement