நீலகிரி

கூடலூரில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி

DIN

கூடலூரில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மனவளக்கலை யோகா பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.
கூடலூர் மனவளக்கலை மன்றத்தில் கல்வித் துறை உத்தரவின்பேரில் கூடலூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 18 அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.  இந்தப் பயிற்சி முகாமில் எளிய முறை உடற்பயிற்சி, காயகல்ப பயிற்சி, தியானம் போன்றவை கற்றுத் தரப்படுகின்றன.
பயிற்சியை மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் தலைவரும் பேராசிரியருமான டி.திகம்பரம் தலைமயில் பேராசிரியர்கள் தங்கமணி, இந்திராதேவி, சந்திரகலா, சுமதி, துணைப் பேராசிரியர்கள் மணிகண்டன், மணி, மாலதி, அருள்நிதி சின்னசாமி ஆகியோர் பயிற்சியளிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT