முகப்பு
நீலகிரி

அன்னமலை முருகன் கோயில் 28-ஆம் ஆண்டு காவடிப் பெருவிழா

மஞ்சூர் அன்னமலை முருகன் கோயில் 28-ஆம் ஆண்டு காவடிப் பெருவிழா ஏப்ரல் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 

Updated On : 5 ஏப்ரல் 2018, 6:56 am IST
பகிர்:

மஞ்சூர் அன்னமலை முருகன் கோயில் 28-ஆம் ஆண்டு காவடிப் பெருவிழா ஏப்ரல் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 
மஞ்சூர் அருகேயுள்ள அன்னமலையில் புகழ்பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 1-ஆம் தேதி நடக்கும் காவடிப் பெருவிழா பிரசித்தி பெற்றது. இதில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். 
நடப்பு ஆண்டு அன்னமலை முருகன் கோயிலில் 28ஆம் ஆண்டு காவடிப் பெரு விழா ஏப்ரல் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 
விழாவில் பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், காமாட்சி புரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், அன்னமலை தண்டாயுதபாணி முருகன் கோயில் ஸ்தாபகர் கரு கிருஷ்ணா நந்தஜி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். 
இதில் படுகர், மலை வாழ் பழங்குடி மக்களின் கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், திருமுருக பக்தர்கள் பேரவை, அன்னமலை கிருத்திகை மகளிர் சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments