முகப்பு
நீலகிரி

தடையை மீறி பேரணி: 40 பேர் கைது

கூடலூரில் தடையை மீறி கண்டனப் பேரணி நடத்திய சோஷியல் டெமாக்ரடிக் ஃபார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியினர் (எஸ்.டி.பி.ஐ.) 40 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

Updated On : 19 ஏப்ரல் 2018, 1:28 am IST
பகிர்:

கூடலூரில் தடையை மீறி கண்டனப் பேரணி நடத்திய சோஷியல் டெமாக்ரடிக் ஃபார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியினர் (எஸ்.டி.பி.ஐ.) 40 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
  காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கூடலூரில் கண்டனப் பேரணி நடத்த எஸ்.டி.பி.ஐ.கட்சியனர் அனுமதி கோரியிருந்ததனர். ஆனால்,  இதற்கு போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர்.
   இந்நிலையில்,  பாரத ஸ்டேட் வங்கி அருகில் மாவட்டப் பொருளாளர் சிராஜுதீன் தலைமையில் கண்டனப் பேரணியில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து, போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி 40 பேரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.