உதகையில் திருச்சிலுவை மகிமை தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
உதகையில் தென்னகத்தின் கல்வாரி என அழைக்கப்படும் குருசடி திருத்தலத்தில் இயேசு பிரான் சுமந்து சென்ற திருச்சிலுவையின் ஒரு பகுதி பாதுகாக்கப்பட்டு வருகிறது. திருச்சிலுவை மகிமைப்படுத்தப்பட்ட தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதற்காக உதகை காந்தல் பகுதியிலிருந்து குருசடி திருத்தலம் வரை திருச்சிலுவை பவனி நடைபெற்றது.
குருசடி திருத்தலத்தில் உதகை மறைமாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில் சிறப்புக் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது .
அருட்தந்தை ஜே.அலெக்சாண்டர், இமானுவேல் ஆகியோருடன் குருசடி திருத்தல அதிபர் அமிர்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன் ஒரு பகுதியாக புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதில் 19 சிறுவர், சிறுமியருக்கு புதுநன்மை வழங்கப்பட்டது.
இதில் பங்கேற்ற 19 குழந்தைகளுக்கும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, அவரது கணவர் ஆகியோர் ஞானத் தாய், தந்தையராக இருந்து புதுநன்மை விழாவை சிறப்பித்தனர்.