நீலகிரி

பிளாஸ்டிக் பொருள்களை சுற்றுலாப் பயணிகள் தவிர்க்க வேண்டும்: நடிகர் விவேக் வேண்டுகோள்

DIN

பசுமை நிறைந்த மாவட்டமான நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்க்க வேண்டும் என்று நடிகர் விவேக் தெரிவித்தார்.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் மிக முக்கியமான பகுதியாக இருந்து வரும் நிலையில் அரிய வகை தாவரங்கள், வன விலங்குகள், பறவைகள் இங்குள்ளன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், பிளாஸ்டிக் பொருள்களை சாப்பிட்டு வன விலங்குகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இதனிடையே, மாவட்ட நிர்வாகம் சார்பில் குன்னூரை அடுத்த எல்லநள்ளியில் பிளாஸ்டிக்கை தடுப்பது குறித்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் விவேக் அரிய வகை மரங்களை நடவு செய்தார். பிளாஸ்டிக் பொருள்களை சுத்தம் செய்து தூய்மை பாரதம் திட்டம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டம், உயிர் சூழல் மண்டலத்தில் மிக முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில் பசுமை நிறைந்த நீலகிரிக்கு ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என்றார். 
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை  திட்ட இயக்குநர் பாபு, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மனோரஞ்சிதம், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் சுரேஷ், கேத்தி பேரூராட்சியின் செயல் அலுவலர் நடராஜ் மற்றும் எல்லநள்ளி, கேத்திப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள், பொது நல சங்கத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT