நீலகிரி

கூடலூர் அருகே யானை தாக்கி ஆதிவாசி மூதாட்டி பலி

DIN

கூடலூரை அடுத்துள்ள சளிவயல் பகுதியில் யானை தாக்கி ஆதிவாசி மூதாட்டி இறந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
நீலகிரி மாவட்டம், கூடலூரைஅடுத்துள்ள சளிவயல் மில்லிக்குன்னு ஆதிவாசி காலனியைச் சேர்ந்தவர் காளி (70). இவர் விறகு சேகரிப்பதற்காக அருகிலுள்ள தோட்டப் பகுதிக்கு சனிக்கிழமை சென்றுள்ளார். இந்நிலையில், வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடிப்பார்த்தபோது அருகில் உள்ள தோட்டப் பகுதியில் யானை தாக்கியதில் உடல் சிதைந்து அவர் இறந்துகிடப்பது தெரியவந்தது.  இது குறித்து கூடலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை": மோடி | செய்திகள்: சிலவரிகளில் | 20.05.2024

எத்தனை மனிதர்கள்

கனமழை நீடிக்கும்: 9 மாவட்டங்களுக்கு ’ஆரஞ்ச் எச்சரிக்கை’

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் : பிரதமர் மோடி

சிதம்பரம் மறைஞான சம்பந்தர் அருளிய அருணகிரிப் புராணம்

SCROLL FOR NEXT