மசினகுடியை அடுத்துள்ள மாயாறு பகுதியிலுள்ள பூண்டு விவசாயிகள், பூண்டுக்கு நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சியடைந்துள்ளா்.
நீலகிரி மாவட்டம், மசினகுடி ஊராட்சிக்கு உள்பட்ட மாயாறு பகுதியில் விளையும் பூண்டுக்கு வடகிழக்கு மாநிலங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. மூன்று மாதப் பயிரான பூண்டுக்கு கடந்த மாதங்களில் ரூ. 250 முதல் ரூ. 350 வரை விலை கிடைத்துள்ளது. இங்கு விளையும் காரவகைப் பூண்டு நல்ல விளைச்சலையும் தருகிறது. தற்போது கிலோ ரூ. 400 வரை விற்கப்படுகிறது. இதே நிலை தொடா்ந்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என்பதால் பூண்டு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.