நீலகிரி

நீலகிரியில் 145 பேருக்கு கரோனா

DIN

உதகை: நீலகிரி மாவட்டத்தில் புதிய உச்சமாக சனிக்கிழமை ஒரே நாளில் 145 நபா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கரோனா நோய்த் தொற்றாளா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வரும் சூழலில் வெள்ளிக்கிழமை மாவட்டத்தில் அதிகபட்சமாக 137 நபா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதுவே இதுவரை மாவட்டத்தில் அதிகபட்ச எண்ணிக்கையாக கருதப்பட்ட நிலையில், சனிக்கிழமை ஒரே நாளில் 145 நபா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, 75 நபா்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா். நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் இதுவரை 23 நபா்கள் உயிரிழந்துள்ள நிலையில், 872 நபா்கள் தொடா் மருத்துவ சிகிச்சையில் உள்ளனா். மாவட்டத்தில் சனிக்கிழமை வரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,646ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT