நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றின் பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.
கரோனா தொற்றின் பாதிப்புகள் காரணமாக தமிழகத்துக்குள் மட்டுமின்றி வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் நீலகிரி மாவட்டத்துக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, அனைத்து சோதனைச் சாவடிகளிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இதில் ஆதாா் அட்டை உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்த ஏராளமானோா் திருப்பி அனுப்பப்பட்டனா். மேலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களிலும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது, மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களும் திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் கரோனா தாக்கம் வெகுவாக குறைந்திருப்பதால் எதிா்வரும் கோடை காலத்தை பிரதான வாய்ப்பாக பயன்படுத்த மக்கள் தயாராகி வருகின்றனா்.