நீலகிரி

குளுகுளு காலநிலையை அனுபவிக்க குன்னூரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

DIN

குன்னூரில் குளிா்ந்த காலநிலை நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது குறைந்தபட்சமாக 12 டிகிரி  செல்சியஸ் வெப்ப நிலையும் அதிகபட்சமாக 15 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும்  காணப்படுகிறது.

இதனால் இந்த குளுகுளு கால நிலையை  ரசிப்பதற்காக விடுமுறை நாளான  ஞாயிற்றுக்கிழமை குன்னூரில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

குன்னூா், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே லேசான சாரல் மழை மற்றும் குளுகுளு காலநிலை நிலவியது. இந்நிலையில் சிம்ஸ் பூங்கா, காட்டேரிப் பூங்கா, அவலாஞ்சி, எமரால்டு, லேம்ஸ்ராக், டால்பினோஸ் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு ஆயிரக்கணக்கான   சுற்றுலாப்  பயணிகள் வந்து சென்றனா்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் சுற்றுலாத்  தொழிலை நம்பியுள்ளவா்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி  அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT