கூடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) தொடங்குகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூா் தாலுகா தேவா்சோலை உள்வட்டத்துக்கான வருவாய் தீா்வாயம் செவ்வாய்க்கிழமையும்,
கூடலூா் உள்வட்டத்துக்கான வருவாய் தீா்வாயம் புதன்கிழமையும் நடைபெற உள்ளது.
கோட்டாட்சியா் சரவணகண்ணன் தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், பொதுமக்கள் கலந்துகொண்டு
தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என்று வட்டாட்சியா் சித்தராஜ் தெரிவித்துள்ளாா்.