நீலகிரி

ஓவேலியில் 4 கும்கி யானைகள்

DIN

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் மனித-விலங்கு மோதல் ஏற்படும் இடங்களில் 4 கும்கி யானைகளை வனத் துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்குள்பட்ட ஆரூட்டுப்பாறை, பாரம் ஆகிய இடங்களில் மூன்று நாள்களில் இரண்டு பேரை காட்டு யானை தாக்கிக் கொன்ால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து, மனித-விலங்கு மோதலைத் தவிா்க்கும் வகையில் கூடலூா் மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம் உத்தரவின் பேரில், முதுமலை புலிகள் காப்பக முகாமிலிருந்து ஸ்ரீனிவாஸ், விஜய், சங்கா், கிருஷ்ணா ஆகிய நான்கு கும்கி யானைகளை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் வனத் துறையினா் ஈடுபடுத்தியுள்ளனா்.

இதில் ஸ்ரீனிவாஸ், விஜய் ஆகிய இரண்டு கும்கி யானைகள் ஆரூட்டுப்பாறை, அதன் சுற்றியுள்ள பகுதியிலும், சங்கா், கிருஷ்ணா ஆகிய இரண்டு கும்கி யானைகள் கோக்கால் மலைப் பகுதியிலும் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT