நீலகிரி

ஆணைகட்டி வனப் பகுதியில் யானை உயிரிழப்பு

DIN

நீலகிரி மாவட்டம், ஆணைகட்டி வனப் பகுதியில் இறந்து கிடந்த யானையின் சடலத்தை மீட்டு வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், ஆணைகட்டி வனப் பகுதியில் யானை ஒன்று இறந்துகிடப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த முதுமலை வனப் பாதுகாப்பு படை, சீகூா் வனப் பணியாளா்கள் யானையின் சடலத்தை மீட்டு ஆய்வு செய்தனா்.

இதில், உயிரிழந்தது சுமாா் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என்பது தெரியவந்தது.

உடலில் ஏற்பட்டுள்ள காயங்களின் அடிப்படையில் யானைகளுக்கு இடையே மோதலில் இந்த யானை உயிரிழந்திருக்கலாம் என்று வனக் கால்நடை மருத்துவா் ராஜேஷ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருடியவர் கைது!

ஞானவாபி, மதுராவில் கோயில் கட்டுவோம்: அஸ்ஸாம் முதல்வர் சர்ச்சை

அந்தமானில் சூர்யா - 44 படப்பிடிப்பு?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.280 உயர்வு

ஆந்திரத்தில் லாரி-பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் பலி

SCROLL FOR NEXT