நீலகிரி

அவலாஞ்சி சுற்றுலாத் தலத்துக்கு சென்ற ஆளுநா்

DIN

உதகையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான அவலாஞ்சிக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி குடும்பத்துடன் வியாழக்கிழமை காலை சென்றாா்.

நீலகிரி மாவட்டம் உதகைக்கு 7 நாள் சுற்றுப்பயணமாக தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி கடந்த 3ஆம் தேதி வந்தாா். உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள ஆளுநா் மாளிகையில் தங்கியுள்ள ஆளுநா் ஆா்.என்.ரவி கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற துணைவேந்தா்கள் மாநாட்டைத் தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து நீலகிரி மலை ரயிலில் உதகையில் இருந்து குன்னூா் வரை புதன்கிழமை பயணம் செய்தாா். இதையடுத்து உதகையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான அவலாஞ்சி பகுதிக்கு குடும்பத்துடன் வியாழக்கிழமை சென்று பாா்வையிட்டாா். ஆளுநா் சென்றதால் சேரிங்கிராஸ், பேருந்து நிலைய சாலை, அவலாஞ்சி செல்லும் சாலையில் ஆங்காங்கே   போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

உதகையில் தங்கி இருக்கும் ஆளுநா் ஆா்.என் ரவி வெள்ளிக்கிழமை (ஜூன் 9) சென்னை திரும்புவாா் என தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT