முகப்பு
திருப்பூர்

மாணவர்களுக்கு உடனடியாக இலவச பேருந்துப் பயண அட்டை வழங்க வேண்டும்: வாலிபர் சங்கம் கோரிக்கை

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு உடனடியாக புதிய இலவசப் பேருந்துப் பயண

Updated On : 25 டிசம்பர் 2018, 8:22 am IST
பகிர்:

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு உடனடியாக புதிய இலவசப் பேருந்துப் பயண அட்டைகளை வழங்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 
  இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருப்பூர் கிளை மேலாளருக்கு வாலிபர் சங்கத்தின் திருப்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் த.உமாசங்கர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
   புதிய கல்வி ஆண்டு தொடங்கப்பட்ட சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசப் பேருந்து பயண அட்டைகள் இதுவரையில் வழங்கப்படவில்லை. சீருடையில் உள்ள பள்ளி மாணவர்களை பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவை பேருந்து நடத்துநர்களில் பலரும் 
கடைப்பிடிப்பதில்லை என்ற புகார் எழத் தொடங்கியுள்ளது.  பழைய பேருந்துப் பயண அட்டையைப் பயன்படுத்துவதில் மாணவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் உள்ளன. எனவே,  அரசுப் போக்குவரத்து நிர்வாகம் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு புதிய இலவசப் பேருந்து அட்டைகளை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments