திருப்பூர்

சாலை விபத்தில் லாரி ஓட்டுநர் சாவு

DIN

பல்லடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் லாரி ஓட்டுநர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 
தேனியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (45). லாரி ஓட்டுநர். கிருஷ்ணன் (38). கிளீனர். இருவரும் சென்னையில் இருந்து பாரம் ஏற்றிக் கொண்டு கோவையை நோக்கி வந்துள்ளனற்ர். 
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே, செட்டிபாளையம் சாலையில் உள்ள உணவு விடுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் சாப்பிட்டுள்ளனர். 
அதன்பின், அழகர்சாமி செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டே சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அழகர்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த கிருஷ்ணன் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இதுகுறித்து, பல்லடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT