திருப்பூர்

வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் திருட்டு

DIN

திருப்பூர் அருகே வீட்டின் பூட்டை  உடைத்து 60 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்  சென்றனர். 
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே ராக்கியாபாளையம்  கே.ஆர்.ஜி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் அருண்குமார்(36). நூற்பாலை அலுவலர். இவரது குடும்பத்தினர் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி  வெளியூர் சென்றுள்ளனர். 
பின்னர் திங்கள்கிழமை இரவு திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 60 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிவந்தது. தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக ஆலோசனைக் கூட்டம்

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கட்டுமான பணியின்போது தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உயிருக்கு அச்சுறுத்தல்: தோ்தல் ஆணையருக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கடிதம்

SCROLL FOR NEXT