திருப்பூர்

அரசு நிலத்தில் வெடிவைத்து பாறை தகர்ப்பு

DIN


பல்லடம் அருகே கள்ளிமேட்டில் அரசு நிலத்தில் பாறையை சிலர் வெடிவைத்துத் தகர்த்துள்ளனர். 
பல்லடம் வட்டம், கணபதிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கள்ளிமேட்டில் அரசு புறம்போக்கு நிலத்துக்குப் பின்புறம் தனி நபர்கள் நிலத்தை வீட்டுமனையாகப் பிரித்து விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்த இடத்துக்கு முன்புறமாக அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள பாறை இடையூறாக இருப்பதாகக் கருதி அதை வெடிவைத்து சனிக்கிழமை தகர்த்துள்ளனர். 
இது பற்றி அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் சுந்தரபாண்டியனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். அப்போது, அனுமதி இன்றி பாறை வெடிவைத்துத் தகர்க்கப்பட்டதை உறுதி செய்து, மேல் நடவடிக்கை எடுக்குமாறு பல்லடம் வட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை அனுப்பிவைத்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT