பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையாளராக பணியாற்றி வந்த வில்சன் வெள்ளகோயிலுக்கும், பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) கந்தசாமி தாராபுரத்துக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த பியூலா எப்சிபாய் பதவி உயர்வு பெற்று பல்லடம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளராகவும், அதே போல் மடத்துக்குளம் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த கனகராஜ் பதவி உயர்வு பெற்று பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சிகள்) சனிக்கிழமை பொறுப்பேற்றனர்.