உடுமலை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெதப்பம்பட்டியில் பள்ளி மாணவர்கள் சனிக்கிழமை வாக்காளர் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, பெதப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இருந்து மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணியை வருவாய்த்துறை அதிகாரிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில், முன்னாள் சென்ற மாணவர்கள் இசைக்கருவிகளை வாசிக்க, பின்தொடர்ந்து வந்த மாணவர்கள் வாக்களிப்பதன் அவசியம், பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும், வாக்குரிமை நமது அடிப்படை உரிமை போன்ற முழக்கங்களை எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர்.