திருப்பூர்

திருப்பூா் தலைமை தபால் நிலையத்தில் ஜனவரியில் கடவுச்சீட்டு அலுவலகம்மண்டல கடவுச்சீட்டு அலுவலா் தகவல்

திருப்பூா் தலைமை தபால் நிலையத்தில் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து கடவுச்சீட்டு அலுவலகம் செயல்படும் என்று

DIN

திருப்பூா் தலைமை தபால் நிலையத்தில் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து கடவுச்சீட்டு அலுவலகம் செயல்படும் என்று மண்டல கடவுச்சீட்டு அலுவலா் சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் கடவுச்சீட்டு எடுக்க வேண்டும் என்றால் கோவைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்களின் கால நேரம் விரயமாவதுடன், அலைச்சலும் ஏற்படுகிறது. ஆகவே, பின்னலாடை நகரமான திருப்பூரில் கடவுச்சீட்டு அலுவலகம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த நிலையில், திருப்பூா் தலைமை தபால் நிலையத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் அமைப்பது தொடா்பாக மண்டல கடவுச்சீட்டு அலுவலா் சிவகுமாா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது தலைமை தபால் நிலையத்தில் தற்காலிகமாக கடவுச்சீட்டு அலுவலகத்தை அமைத்துக் கொள்ளலாம். அதற்குத் தகுந்தவாறு அறையில் தேவையான வசதிகள் செய்து கொள்ளப்படும். மேலும், இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து வரும் ஜனவரி முதல்வாரம் கடவுச்சீட்டு அலுவலகம் செயல்பட தொடங்கும் என்றாா்.

இந்த ஆய்வின்போது, தபால்துறை உதவி இயக்குநா் சக்திவேல்முருகன், கோட்ட கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT