திருப்பூர்

லாரி மோதியதில் முறிந்து விழுந்த மின்கம்பம்

DIN


அவிநாசி அருகே ரங்கா நகர் பகுதியில் சனிக்கிழமை டிப்பர் லாரி மோதியதில் மின்கம்பம் முறிந்து விழுந்தது.
 அவிநாசி, ரங்கா நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக அங்குள்ள ஒரு மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அப்பகுதியில் மின் விநியோகம் தடைபட்டது.
 தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரியத்தினர், மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT