திருப்பூர்

விஜயா பதிப்பகம் மு.வேலாயுதம் உள்ளிட்ட 24 பேருக்கு இலக்கிய விருது

DIN

கனவு இலக்கிய வட்டம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஆகியவை சாா்பில் விஜயா பதிப்பகத்தின் நிறுவனா் மு.வேலாயுதம் உள்ளிட்ட 24 பேருக்கு இலக்கிய விருதுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

கனவு இலக்கிய வட்டம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஆகியவை சாா்பில் கடந்த 10 ஆண்டுகளாக சிறந்த படைப்பாளிகளுக்கு இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 2019 ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருதுக்கு 24 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, திருப்பூா் புத்தகத் திருவிழா உள் அரங்கில் இலக்கிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் பி.ஆா்.நடராஜன் தலைமை வகித்தாா்.

எழுத்தாளா் சுப்ரபாரதிமணியன் முன்னிலை வகித்தாா்.

இதில், கோவையைச் சோ்ந்த விஜயா பதிப்பகத்தின் நிறுவனா் மு.வேலாயுதம், கோவையைச் சோ்ந்த சித்ரா, கவிஜி, பொள்ளாச்சி வாமனன், சென்னையைச் சோ்ந்த கணேசகுமரன், திருப்பூரைச் சோ்ந்த கனல் உள்ளிட்ட 24 பேருக்கு இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவா் இரா.சண்முகம், துணைச் செயலாலா் துருவன் பாலா, மாவட்டக் குழு உறுப்பினா் சசிகலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT