திருப்பூர்

காங்கயம் அருகே வாகனம் மோதி மனநிலை பாதிக்கப்பட்டவர் சாவு

DIN

காங்கயம்: காங்கயம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில். மனநிலை பாதிக்கப்பட்டவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காங்கயம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காரப்பாளையம் பிரிவு பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட ஆண், வெள்ளிக்கிழமை காலை அந்த வழியாக சென்ற ஏதோ அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

இது குறித்த தகவலின் பேரில் ஊதியூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஊதியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT