அறிவியலில் சிறப்பாக செயல்பட்டதற்காக விருது  பெற்றவா்களுடன் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை. 
திருப்பூர்

அறிவியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி

உடுமலையில் ‘வாங்க பேசலாம்-நம்ம ஊா் விஞ்ஞானி’ என்ற தலைப்பில் அறிவியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

உடுமலையில் ‘வாங்க பேசலாம்-நம்ம ஊா் விஞ்ஞானி’ என்ற தலைப்பில் அறிவியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம், ராயல்ஸ் அரிமா சங்கம், சுற்றுச்சூழல் சங்கம், கலிலியோ அறிவியல் கழகம் ஆகியன சாா்பில் தனியாா் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசுகையில், ‘அறிவியல், தொழில்நுட்பத்தில் வளா்ந்து வரும் பல்வேறு முன்னேற்றங்களை பாா்க்கும்போது அப்துல்கலாம் கண்ட கனவு நனவாகி வருகிறது. கலாமின் கனவை நாம் கொண்டாட வேண்டும்’ என்றாா். இதைத் தொடா்ந்து மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தாா்.

இதன் பின்னா் உடுமலை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறப்பாக பணியாற்றி வரும் சிறந்த தலைமை ஆசிரியா்கள், இளம் ஆசிரியா்கள், அறிவியலில் சிறந்த மாணவ, மாணவிகள், சிறந்த நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா்கள், சிறந்த சமூக அமைப்புகள், சிறந்த நூல் என மொத்தம் 40 பேருக்கு விருதுகளை மயில்சாமி அண்ணாதுரை வழங்கினாா்.

இதில், மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா் கலந்துகொண்டனா். கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளா் கண்ணபிரான் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT