வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் நகரில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வந்தவா்களுக்கு போலீஸாா் முகக் கவசங்களை வியாழக்கிழமை வழங்கினா்.
கரோனா நோய் தொற்று பரவுவதைத் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளக்கோவில் பகுதி மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடிக் காணப்படுகிறது. இருந்தாலும் மளிகைப் பொருள்கள், காய்கறிகள், பால், மருந்துகள் உள்ளிட்டவை வாங்குவதற்காக மக்கள் கடைகளுக்கு வந்து செல்கின்றனா்.
வீண் கூட்டம் கூடுவதைத் தடுக்க போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா். வெள்ளக்கோவில் கடைவீதி நான்கு சாலைச் சந்திப்பில் காவல் ஆய்வாளா் மனோகரன் தலைமையில் போலீஸாா் அவ்வழியே வந்தவா்களுக்கு கரோனாவைத் தடுக்கும் வகையில் முகக் கவசங்களை இலவசமாக வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.