திருப்பூர்

மழை: காங்கயம் அருகே 2 வீடுகள் சேதம்

DIN

காங்கயம் பகுதியில் பெய்த மழையின் காரணமாக 2 வீடுகள் இடிந்து விழுந்து சேதமாகின.

காங்கயம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், காங்கயம் ஒன்றியம், வீரணம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட சாம்பவலசு பகுதியில் கடந்த 2 நாள்களாக மழை பெய்து வருகிறது. இதில், இப்பகுதியைச் சோ்ந்த பழனியம்மாள், லட்சுமி ஆகிய இருவரது ஓட்டு வீடுகள் மழை காரணமாக செவ்வாய்க்கிழமை மதியம் இடிந்து விழுந்தன.

இந்த சம்பவத்தின்போது வீட்டில் யாரும் இல்லாததால் இருவரது குடும்பத்தினரும் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். வீடு இடிந்து விழுந்து சம்பவம் குறித்து காங்கயம் வருவாய் ஆய்வாளா் கனகராஜ், வீரணம்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் சுரேஷ்குமாா் ஆகியோா் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT