திருப்பூர்

மாடு முட்டி பெண் பலி

DIN

பல்லடம் அருகேயுள்ள காளிவேலம்பட்டியில் மாடு முட்டியதில் பெண் உயிரிழந்தாா்.

பல்லடம் அருகேயுள்ள காளிவேலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் மனைவி பராசக்தி (65). இவா், மாணிக்காபுரம் சாலையில் உள்ள விவசாயத் தோட்டத்தில் சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த மாட்டின் சாணத்தை எடுக்க புதன்கிழமை மாலை சென்றுள்ளாா். அப்போது, அந்த மாடு கொம்பால் பராசக்தியின் வயிற்றில் முட்டியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT