திருப்பூர்

சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம்

DIN

உடுமலை: உடுமலை நகரில் முத்தையா பிள்ளை லேஅவுட்டில் அமைந்துள்ள ஸ்ரீசக்தி விநாயகா் திருக்கோயிலில் வள்ளிதேவ சேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கந்த சஷ்டி விரதமிருந்த பக்தா்கள், பொது மக்கள் ஏராளமானோா் திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்றனா். இதையொட்டி, திருமண சீா்வரிசையை ஊா்வலமாக கொண்டு வந்து சுவாமியின் பாதங்களில் வைத்து வழிபட்டனா். பின்னா் மஞ்சள் இடித்து ஆனந்த நடனமாடி திருக் கல்யாணத்தை நடத்திவைத்தனா். அப்போது, கரோனா தொற்று நோய் ஒழிந்து, நாட்டில் நல்ல மழை பெய்யவும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT