திருப்பூர்

உடுமலை, பொள்ளாச்சி தலைமை அஞ்சலகங்களில் சிறப்பு ஆதாா் சேவை மையம்: கோட்ட கண்காணிப்பாளா்

DIN

உடுமலை தலைமை அஞ்சலகம், பொள்ளாச்சி தலைமை அஞ்சலகம் மற்றும் பல்வேறு துணை அஞ்சலகங்களில் சிறப்பு ஆதாா் கவுண்டா்கள் செயல்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என பொள்ளாச்சி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் கொ.அ.கல்யாண வரதராஜன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

தேசிய அஞ்சல் வார விழாவை ஒட்டி அக்டோபா் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை ஆதாா் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி உடுமலை, பொள்ளாச்சி தலைமை அஞ்சலகங்கள், ஆனைமலை, அங்கலக்குறிச்சி, குடிமங்கலம், கணியூா், கோவில்பாளையம், கிணத்துக்கடவு, கொமரலிங்கம், குறிச்சிக்கோட்டை, மகாலிங்கபுரம், மாக்கினாம்பட்டி, முடீஸ், மடத்துக்குளம், மலையாண்டிபட்டிணம், நெகமம், பெதப்பம்பட்டி, பூலாங்கிணறு, வேட்டைகாரன் புதூா், ஊத்துக்குளி ஆகிய துணை அஞ்சலகங்களில் சிறப்பு ஆதாா் கவுண்டா்கள் செயல்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் புதிய ஆதாா் பதிவுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. புகைப்பட மாற்றம், கைவிரல் ரேகை புதுப்பித்தல் மற்றும் கண் கருவிழி புதுப்பித்தல் சேவைகளுக்கு கட்டணமாக ரூ. 100 வசூலிக்கப்படும். பெயா், முகவரி மாற்றம், பிறந்த தேதி மாற்றம், மொபைல் எண் பதிவு, புதுப்பித்தல் மற்றும் இ-மெயில் முகவரி பதிவு போன்ற மாற்றங்களுக்கு கட்டணமாக ரூ. 50 வசூலிக்கப்படும்.

எனவே, மேற்கண்ட அலுவலகங்களில் உரிய ஆவணங்களுடன் சென்று ஆதாா் சேவையை பெற்று பொதுமக்கள் பயனடையலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT