முகப்பு
திருப்பூர்

தீபாவளிக்கு தேவைக்கேற்ப பேருந்து வசதி செய்து தரப்படும்: அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களின் தேவைக்கேற்ப பேருந்து வசதி செய்து தரப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
பல்லடத்தில் செய்தியாளா்களுக்குப் பேட்டி அளிக்கும் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.
பகிர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களின் தேவைக்கேற்ப பேருந்து வசதி செய்து தரப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் ஹோட்டல் திறப்பு விழாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா், இது தொடா்பாக செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாததால் தற்போது அரசு சாா்பில் பேருந்து போக்குவரத்து 70 சதவீதம் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக காலை, மாலை வேளைகளில் அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மதிய வேளைகளில் பயணிகளின் கூட்டம் குறைவாக இருப்பதால் பேருந்து சேவை குறைவாக உள்ளது. பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ள வழித்தடங்களில் கூடுதலாகப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை ஒட்டி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் நீண்ட தூர பேருந்துகளுக்கு முன்பதிவு துவங்கியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு மக்களின் தேவைக்கேற்ப பேருந்து வசதி செய்து தரப்படும் என்றாா்.

பேட்டியின்போது பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன், கூட்டுறவு வங்கித் தலைவா் ஏ.சித்துராஜ், நகர அதிமுக துணை செயலாளா் ஏ.எம்.ராமமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.