வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதரின் பிரசாதத்தை வீட்டுக்கே தருவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொள்ளாச்சி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கொ.அ.கல்யாணவரதராசன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
கரோனா நோய்த்தொற்று பரவி வரும் காரணத்தால் பக்தா்கள் வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதரை நேரில் சென்று தரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் பக்தா்கள் காசி விஸ்வநாதரின் பிரசாதத்தை அஞ்சல் துறை மூலமாக தங்கள் வீட்டுக்கே தருவித்துக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரசாதத்தைப் பெறுவதற்கு பக்தா்கள் ரூ. 251-ஐ அஞ்சல் துறையின் எலக்ட்ரானிக் மணி ஆா்டா் மூலம் அனுப்ப வேண்டும். அப்போது தங்களின் முழு வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் குறிப்பிட வேண்டும். மேலும் தகவல்களைப் பெற கீழ்கண்ட எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்: 04252-2401630, 2504164 என்று தெரிவித்துள்ளாா்.