வெள்ளக்கோவிலில் ஜல் ஜீவன் திட்டப் பணி திங்கள்கிழமை துவங்கப்பட்டது.
இத்திட்டம் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீா் வழங்கும் மத்திய, மாநில அரசுகளின் முயற்சியாகும். இத்துடன் மழைநீா் சேகரிப்பு, நிலத்தடி நீா் செறிவூட்டுதல், கழிவுநீா் சுத்திகரிப்பு பணிகளும் இணைக்கப்பட்டுள்ளன. வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சியில் மொட்டகாளிவலசு, பாப்பாவலசு, சுந்தராடிவலசு, பெரண்டைகாட்டுவலசு, கடல் நகா் பகுதியில் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்பட உள்ளது.
இதற்கானப் பணியை வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஆா். வெங்கடேச சுதா்சன் துவக்கிவைத்தாா். ஒன்றிய துணைத் தலைவா் தனலட்சுமி துரைசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.