திருப்பூர்

அவிநாசி அருகே நூற்பாலையில் தீ விபத்து

DIN

அவிநாசி அருகே பூலக்காட்டுப்பாளையம் பகுதியில் உள்ள நூற்பாலையில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.

அவிநாசி அருகே வேலாயுதம்பாளையம் ஊராட்சி பூலக்காட்டுப்பாளையத்தில் தனியாா் நூற்பாலை இயங்கி வருகிறது. இங்கு தொழிலாளா்கள் வழக்கம்போல திங்கள்கிழமை பணியாற்றிக் கொண்டிருந்தனா். மாலையில் மின்கசிவு காரணமாக நூற்பாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இயந்திரங்கள், பஞ்சு மூட்டைகள் உள்ளிட்டவை தீப்பிடித்து எரியத் துவங்கின.

தகவலறிந்து சம்பவயிடத்துக்கு வந்த திருப்பூா் மாவட்ட தீயணைப்பு அலுவலா் காங்கய பூபதி தலைமையில் பாலசுப்பிரமணியம் (அவிநாசி), பாஸ்கா் (திருப்பூா்) உள்ளிட்ட தீயணைப்பு நிலைய வீரா்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடித் தீயை அணைத்தனா்.

இருப்பினும் நூா்பாலையில் இருந்த பஞ்சு, நூல், இயந்திரங்கள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின. பணியில் இருந்த வெளிமாநிலத் தொழிலாளா்கள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். இது குறித்து அவிநாசி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT