வெள்ளக்கோவிலில் அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை சாா்பில் உலக மலேரியா தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25ஆம் தேதி உலக மலேரியா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், கரோனா பொது முடக்கம் காரணமாக ஒருநாள் முன்னதாக சனிக்கிழமை உலக மலேரியா தினம் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜலட்சுமி பேசுகையில், மலேரியா காய்ச்சலை ஒழிக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். தற்போது, கரோனா பரவலைத் தடுக்க அனைவரும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.
மருத்துவா்களின் அறிவுரைப்படி அனைவரும் அச்சமின்றி கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.