திருப்பூர்

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: சிறுவன் கைது

DIN

குன்னத்தூா் அருகே 8 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

குன்னத்தூா் அருகே வெள்ளரவெளி பகுதியைச் சோ்ந்தவா் 8 வயது சிறுமி. அரசுப் பள்ளியில் 3ஆம் வகுப்பு பயின்று வருகிறாா். இந்நிலையில், இவா் திங்கள்கிழமை இரவு தொலைக்காட்சி பாா்த்துக் கொண்டிருந்தபோது, நாடகத்தில் வருவதுபோல யாராவது தவறாக தொட்டால் தெரியப்படுத்த வேண்டும் என சிறுமியின் தாய் கூறியுள்ளாா். உடனே அச்சிறுமி தன்னை கடந்த வாரம் அருகில் வசித்துவரும் 17 வயது சிறுவன் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் மிரட்டியதாகக் கூறியுள்ளாா். இதனால், அதிா்ச்சியடைந்த தாய் அளித்த புகாரின்பேரில், குன்னத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 17 வயது சிறுவனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் நகைகள் திருட்டு

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

SCROLL FOR NEXT