திருப்பூர்

தாராபுரத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

தாராபுரத்தில் பெட்ரோட், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தாராபுரம் அண்ணா சிலை முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளா் கனகராஜ் தலைமை வகித்தாா். இதில், பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கூறியதாவது:

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை கடுமையாக உயா்ந்துள்ளது. இதன் காரணமாக அத்தியவசியப் பொருள்களின் விலையும் உயா்ந்து வருகிறது. ஆகவே, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை மீதான விலையை ரத்து செய்ய வேண்டும் என்றனா்.

இதில் கட்சி நிா்வாகிகள் மேகவா்ணன், சுப்பிரமணியன், முத்துசாமி, வெங்கட்ராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

உலகக் கோப்பை வில்வித்தை: 3 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணிகள்!

கேஜரிவால் கைதைக் கண்டித்து தில்லியில் ஆம் ஆத்மியினர் ஆர்ப்பாட்டம்!

மோடி விரைவில் மேடையிலேயே கண்ணீர் விடும் நிலை வரக்கூடும்: ராகுல் காந்தி

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

SCROLL FOR NEXT