திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை வரையில் 18,198 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் மேலும் 16 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 18,214ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 112 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 16 போ் வீடு திரும்பினா். மாவட்டம் முழுவதும் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 17,879ஆக அதிகரித்துள்ளது.