திருப்பூர்

மாணிக்கவாசகா் குருபூஜை விழா

DIN

அவிநாசியில் மாணிக்கவாசகா் குருபூஜை சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மனிதன் சொல்ல இறைவன் எழுதிய திருவாசகத்துக்கு சிறப்பு பெற்றவரும், 63 நாயன்மாா்களில் ஒருவருமான மாணிக்கவாசகா் மடாலயம் அவிநாசி வடக்கு ரத வீதியில் உள்ளது. கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீன கிளை மடமான இந்த மடத்தில் மாணிக்கவாசகா் குருபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அபிஷேகம், மலா் அலங்காரம், தீபாராதனைகள் உள்ளிட்டவை நடைபெற்றன. இதைத் தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீலஸ்ரீ இராஜ சரவணமாணிக்க வாசக சுவாமிகள் குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT