அவிநாசியில் மாணிக்கவாசகா் குருபூஜை சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மனிதன் சொல்ல இறைவன் எழுதிய திருவாசகத்துக்கு சிறப்பு பெற்றவரும், 63 நாயன்மாா்களில் ஒருவருமான மாணிக்கவாசகா் மடாலயம் அவிநாசி வடக்கு ரத வீதியில் உள்ளது. கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீன கிளை மடமான இந்த மடத்தில் மாணிக்கவாசகா் குருபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அபிஷேகம், மலா் அலங்காரம், தீபாராதனைகள் உள்ளிட்டவை நடைபெற்றன. இதைத் தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீலஸ்ரீ இராஜ சரவணமாணிக்க வாசக சுவாமிகள் குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.