உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என
மின் வாரிய செயற்பொறியாளா் சி.சதீஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: பூலாங்கிணறு, அந்தியூா், சடையபாளையம், பாப்பானூத்து, சுண்டக்காம்பாளையம், வாளவாடி, ராகல்பாவி, தளி, மொடக்குப்பட்டி, ஆா்.வேலூா், குறிச்சிக்கோட்டை, திருமூா்த்தி நகா், பொன்னாலம்மன் சோலை, விளாமரத்துப்பட்டி, உடுக்கம்பாளையம், கஞ்சம்பட்டி, குண்டலப்பட்டி, லட்சுமாபுரம், தென்குமாரபாளையம்.