திருப்பூர்

மது பாட்டிகள் பறிமுதல்

DIN

உடுமலை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 384 மது பாட்டில்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில் தற்போது பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் உடுமலை நகரின் முக்கிய சாலையான தளி சாலையில் போலீஸாா் வாகன சோதனையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது கேரள மாநிலம், மறையூரில் இருந்து உடுமலையை நோக்கி காா் ஒன்று வந்துக் கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்தி போலீஸாா் சோதனை நடத்தினா். இதில் காரின் பின் புறம் மறைத்து வைக்கப்பட்ட பெட்டிகளில் 384 மது பாட்டில்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடா்பாக உடுமலை சாதிக் நகரைச் சோ்ந்த ஷாஜகான் என்பரின் மகன் மன்சூா் இலாகி (29) என்பவரை உடுமலை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT