அவிநாசி: சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.1.50 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.
சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 50 மூட்டைகள் வரத்து இருந்தது.
முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ. 6,600 முதல் ரூ. 6,800 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ. 6,400 முதல் ரூ. 6,500 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ. 6,100 முதல் ரூ. 6,150 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1.50 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது. இதில் 4 வியாபாரிகள், 9 விவசாயிகள் பங்கேற்றனா்.