திருப்பூர்

கரோனா அச்சத்தால் மருத்துவமனைகள் மூடல்

DIN

வெள்ளக்கோவிலில் கரோனா அச்சத்தால் பல மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன.

கடந்த பத்து நாள்களாக வெள்ளக்கோவிலில் கரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

நகரில் 23 தனியாா் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்தாண்டு கரோனா முதல் அலையில் பல மருத்துவா்கள், அவா்களுடைய குடும்பம், செவிலியா்கள், மருத்துவமனை பணியாளா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். கரோனா நோயாளிகளைச் சரியாகக் கவனிக்கவில்லையென பிரச்னைகளும் எழுந்தன.

தற்போதைய வேகமான கரோனா பரவலுக்கு உள்ளூா் மருத்துவமனைகள் ஈடு கொடுக்க முடியவில்லை. பணியாளா்கள் வேலைக்கு வருவதில்லை. இதனால் பல மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. மருத்துவமனைக்குச் செல்பவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மழை: மக்கள் மகிழ்ச்சி

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

SCROLL FOR NEXT