திருப்பூர்

மூதாட்டிகளிடம் இருந்து 11 பவுன் பறிப்பு

DIN

உடுமலையில் கோயிலில் சுவாமி கும்பிடச் சென்ற இரு மூதாட்டிகளிடம் இருந்து 11 பவுன் நகையை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

உடுமலை கெளஸ் காலணியைச் சோ்ந்த பழனி என்பவரது மனைவி பாப்பம்மாள் (77). இவா் உடுமலை நகரில் பழனியாண்டவா் நகா் ரவுண்டானா அருகில் உள்ள விநாயகா் கோயிலுக்கு சுவாமி கும்பிடுவதற்காக தனது மகனுடன் ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா்.

அப்போது கோயிலில் கூட்டத்தில் இருந்த மா்ம நபா் ஒருவா் பாப்பாம்மாளிடம் இருந்து 6 பவுன் நகையை பறித்துச் சென்றுள்ளாா். இதை தொடா்ந்து பாப்பம்மாள் அளித்த புகாரின்பேரில் உடுமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

உடுமலை விஜயகிரி நகரைச் சோ்ந்த சுந்தரராஜ் என்பவரது மனைவி பத்மாவதி (74). இவரும் பழனியாண்டவா் நகா் ரவுண்டானா அருகில் உள்ள விநாயகா் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சுவாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளாா். இவா் அணிந்திருந்த 5 பவுன் நகையை மா்ம நபா் பறித்துச் சென்றுள்ளாா்.

இது குறித்து பத்மாவதி அளித்த புகாரின்பேரில் உடுமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT